பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி பினைமுறி விநியோக மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் வரும் 16ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04/02) காலை இலங்கை புலனாய்வுப்பிரிவினரால் திடீரென கைது செய்யப்பட்ட பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் ( Perpetual Treasuries Limited (PTL) ) உரிமையாளரும், அந்நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் கடும் விசாரைணக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களை இன்று (05/02) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் விளக்கமறியல் காலத்தை வரும் 16ம் திகதிவரை நீடித்திருந்தார்.

 

Latest articles

Similar articles