தேசியப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, இரு வாரங்களாக இலங்கை மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய தேடுதலில், பெருமளவு போதைப் பொருட்களுடன் படகு ஒன்று காலி கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் முறியடிப்பு நடவடிக்கையில், சுமார் 6,200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 300kg ஹெரோயின் மற்றும் 25kg ஐஸ் வகைப் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.