இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிறிய படகில், ஐந்து சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கடத்தல்காரர்கள் உட்பட ஆறு ஆண்கள் என மொத்தம் 13பேர் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13பேரையும் கடற்படையினர் பலாலி காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் தப்பிச் செல்வது அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கரையோர காவல் படையினர் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.