இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று (05/06) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.