நிதிப்பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை திரிபோஷா நிறுவனும் விடுத்துள்ள அறிக்கையில், கொள்வனவு செய்யப்பட்ட 34 கொள்கலன்கள் சோளவகை இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வரும் வாரங்களில் சிறுவர்களுக்கான திரிபோஷா உற்பத்தியும் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.