தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினம்

இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் (இயற்பெயர் இராசையா பார்த்தீபன்) அவர்களின் 34வது ஆண்டு வீர வணக்க தினமாகும்.

இலங்கை இந்திய அரசாங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார்.

ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,

1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

அகிம்சை வழியில் போராடி வீர மரணமடைந்தவருக்கே அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இன்று தமிழர் தாயகம் உள்ளது. சிங்கள கடும் போக்காளர்களின் ஆட்சியில், இலங்கையில் நீதித் துறையும் சாகடிக்கப்பட்டுள்ளதால், சட்டரீதியாகக் கூட போராடாட முடியாத நிலையில் தமிழர்கள் உள்ளனர்.

Latest articles

Similar articles