இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்…

நேற்று (23/11) பாராளுமன்ற அமர்வுகள் தொடங்கும் முன்னர், சபாநாயகரின் இருக்கை உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

விசேட அதிரடிப்படையினரும், இலங்கை காவல்துறையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றதிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலமை எனில் சாதாரண இலங்கை மக்களை யார்தான் காப்பாற்றப்போறார்களோ தெரியாது !!!

Latest articles

Similar articles