இலங்கையில் இன்று(21/04) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்துமுள்ளனர்.
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை இரத்த வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் கொழும்பில் நாரஹேன்பிட்டி, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலனறுவை பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்ததானம் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.