கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கலவரங்களையடுத்து நாடு இப்போது சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது, எனவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அவசியம் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் வரும் வியாழக்கிழமையுடன் (15/03) முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.