​சம்பந்தன் ​- மஹிந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா?

நேற்று (30/10) நடைபெற்ற சம்பந்தன் மஹிந்தவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றமாதிரி தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவாக மஹிந்தவிடம் பின்வருமாறு கூறியுள்ளார்.

நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. உங்களுக்குப் பெரும்பான்மை இருக்குமாயின் அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றத்தை தள்ளிப்போடுவது சட்டத்திற்கு முரணானது.

இறுதியில் மஹிந்த எழுந்து செல்லும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்க்கும்போது தெரிகிறது பேச்சுவார்த்தை எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்று.

Latest articles

Similar articles