இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகினார்

பொலனறுவை பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், அரசியல்ரீதியாக அரசாங்கம் பலமிழக்கும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

Latest articles

Similar articles