ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய பிரதி சபாநாயகராகத் தெரிவு

இன்று(05/05) பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அணி சார்பாக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் சியம்பலப்பிட்டியும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டதால், வாக்கெடுப்பின் மூலம் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்யும்படி சபாநாயகர் உத்தரவு வழங்கினார்.

இதன்படி ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய 148 வாக்குகளைப் பெற்று, பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

அரச அணியினர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டியவிற்கு வாக்களித்ததன் மூலமே ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய பெரும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles