தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிகிச்சை காரணமாக சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார் என சிறைச்சாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Latest articles

Similar articles