கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.
இதில் பௌத்த பிக்குகள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களும், மேலதிக விசாரைணகளுக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.