இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான அனைத்து தகைமைகளும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பாரிய மாற்றங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளமை வரவேற்கத்தக்கது. கடந்த காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் எதையும் நல்லாட்சி அரசாங்கத்தால் நிரூபிக்கமுடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி : வீரகேசரி