பொலனறுவையில் மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனாவின் குழுவில் ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.