கொழும்பு மாநகர எல்லை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டும் பொதுமக்களைக் கைது செய்யுமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இதுவரை வீதியோரங்களில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறும் கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.