இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று(18/01) காலை முதல் நாடளாவியரீதியில் வேலை நிறுத்த்தித்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், மின்சாரசபையின் நிறைவேற்று அதிகாரமுடைய அதிகாரிகளும் பங்கெடுப்பார்கள் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
மூன்று பெண் மின்சாரசபை ஊழியர்கள் உட்பட பல பத்திரிகையாளர்களும் போலீசாரின் தாக்குதலில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.