விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்றில் வழக்கு

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சட்டரீதியான வருமானத்தைத் அப்பாற்பட்டு, சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, 32 சாட்சியாளர்களும் 93 சாட்சிப் பொருட்களும் பெயரிடப்பட்டுள்ளன.

 

Latest articles

Similar articles