2021ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நவம்பர் 30ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம், விடைத்தாள்கள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.