ஹப்புத்தளை விகாரகல பகுதியில் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப் பொருள் பாவனை செய்த 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்டத்திலேயே ஹெரோயின், போதை மாத்திரை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருள் பாவனை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட 58 பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.