அரசாங்கத்திற்கு மக்கள் சிவப்பு எச்சரிக்கை – ரஞ்சன் ராமநாயக்க

முன்னைய அரசாங்கத்தில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்த சிவப்பு எச்சரிக்கையே இந்த தேர்தல் முடிவாகும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள், அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தவர்கள் என எவரையும் இதுவரை இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை. நல்லாட்சியில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி முறைகேடு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர், அதுவம் தாமதமாகவே இடம்பெற்றது. மேற்குறித்த நடவடிக்கைகளை அரசு உரிய காலத்தில் மேற்கொண்டிருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles