அவன்ட் கார்ட் நிறுவன ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ருபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும், அர்ஜுன் ஆலோசியஸ் மீது பாய்ந்த சட்டம் பாய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடும்போது, இலங்கை கடற்படை அவன்ட் கார்ட் நிறுவனத்தை பொறுப்பேற்ற நாள்முதல், தினமும் 10 மில்லியன் ருபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது என தெரிவித்தார்.