நீர்வேலி பகுதியிலுள்ள செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் உள்ள மண்டபத்தில் இருவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடும் காயங்களிற்குள்ளான இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தகவலின்படி, நான்கு ஈருருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர். ஆவா குழு உறுப்பினர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஒருவரே தாக்குதலின் இலக்காக இருந்துள்ளார். இருப்பினும் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரும் வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களை காவல்துறையினர் தடுக்க முடியாமல் இருப்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.