நீர்­வேலியில் கோவி­ல் மண்­ட­பத்­தில் இருவர் மீது வாள்­வெட்டு

நீர்­வேலி பகுதியிலுள்ள செம்­பாட்­டுப் பிள்­ளை­யார் கோவி­லில் உள்ள மண்­ட­பத்­தில் இரு­வர் மீது வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் காயங்களிற்குள்ளான இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

காவல்துறையினரின் தகவலின்படி, நான்கு ஈரு­ருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர். ஆவா குழு உறுப்பினர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஒருவரே தாக்குதலின் இலக்காக இருந்துள்ளார். இருப்பினும் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரும் வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களை காவல்துறையினர் தடுக்க முடியாமல் இருப்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

 

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles