இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு

இலங்கையர்களுக்கு வெகு விரைவில்  இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2019 ஜனவரி முதலாம் திகதிமுதல் சகல நாட்டுக்கும் செல்லக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்ள் மட்டுமே வழங்கப்படும். இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் இனிமேல் வழங்கப்படாது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு என்பது, உரிமையாளரின் விபரங்கள் அடங்கிய ஒரு சிறிய சிப் (chip) கடவுச்சீட்டில் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் மோசடி வேளைகளில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாக இருக்கும். மேலைத்தேய நாடுகளில் இத்தகைய இலத்திரனியல் கடவுச் சீட்டுக்களே பயன்பாட்டிலுள்ளது.

Latest articles

Similar articles