பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது.
போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூகவலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இணையப் பாவனையாளர்கள் சமூகவலைத்தளங்களைப் உபயோகிக்கும்போது, தடங்கல்கள் மற்றும் பெரும் வேகக் குறைவை (low speed) உணருவார்கள்.