மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 323 வரையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 28 சிறுவர்களுடைய மனித எச்சங்களும் உள்ளடங்கும்.
இதேவேளை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இந்த மனித எச்சங்களின் மீதான காபன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த அறிக்கை வரும் 20ம் திகதி (20/02) மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.