இது திரைப் படமோ, கற்பனைக் கதையோ அல்லது வேறு ஒரு நாட்டில் இடம்பெற்ற செய்தியின் தலைப்போ இல்லை. இலங்கையின் வடமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு துயர சம்பவம்.
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (05/12) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
111ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இன்னும் எத்தனை மனித எச்சங்கள் வெளிவர இருக்கிறதோ என்ற அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது.
இருப்பினும், நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில்-மைத்திரி போட்டியில் கவனம் செலுத்துவதால், மேற்குறித்த மனிதப்படுகொலை தொடர்பான விடயங்களை சர்வேதேசத்திற்கு கொண்டுசெல்லும் பணியினை யார்தான் செய்வார்களோ தெரியாது !!!