மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்

மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால், அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களின் அவர் கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ பாவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் முலமாகவும், பதிவுத் தபால் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை ஒழுக்காற்று விசாரனை முடிவுற்ற பின்னர் தெரியப்படுத்தப்படும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles