கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவை தானே கொலை செய்தேன் என கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கிருஸ்னகீதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் எனவும் கொலையாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் தாம் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும், இருப்பினும் கடைசி நேரத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தால் தான் மனம் மாறி அந்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.