கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது

கடந்த 29ம் திகதி கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட நித்தியகலாவின் (32) கொலை தொடர்பாக, கிளிநொச்சி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இறந்த பெண்ணின் கைத்தொலைபேசி தொடர்பாடல்களின் அடிப்படையில், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உடற்கூறுப் பரிசோதனையின்படி நித்தியகலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இறக்கும்போது அவர் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles