இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.
ஆரம்பகாலம் முதல் எவ்வித நிபந்தனைகளுமின்றி மஹிந்தவிற்கான தனது ஆதரவினை தெரிவித்துவரும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, மஹிந்த பெரும் அமைச்சுப் பதவியை வழங்கியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், வட பகுதி மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.