<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Articles &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/category/tamil-articles/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Mon, 18 Nov 2024 23:30:41 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Articles &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முழுமை பெறாத அமைச்சரவை</title>
		<link>https://puthinam.news/npp-cabinet-srilanka/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 23:19:39 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10041</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன. இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி விரயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சனத்தொகைப்படி, 25 வரையிலான அமைச்சர்களை நியமிக்க [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-cabinet-srilanka/">முழுமை பெறாத அமைச்சரவை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுக்கள் இன்னும் ஜனாதிபதி வசமே உள்ளன.</p>



<p>இரண்டு பெண்கள் உட்பட 21 அமைச்சர்களைக் கொண்டதாக புதிய அமைசரவை காணப்படுகிறது. கடந்தகால அரசாங்களில் அமைச்சரவையில் 50 வரையிலான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நிதி விரயம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. <strong>இலங்கையின் சனத்தொகைப்படி, 25 வரையிலான அமைச்சர்களை</strong> நியமிக்க முடியும் என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.</p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="646" src="https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-1024x646.webp" alt="npp cabinet srilanka" class="wp-image-10050" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-1024x646.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-300x189.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-768x484.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-666x420.webp 666w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-150x95.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-696x439.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet-1068x674.webp 1068w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/cabinet.webp 1110w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>புதிய அமைச்சரவையில் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இரு தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை. </p>



<p>மேலும் <span style="text-decoration: underline;">வரலாற்று முக்கியத்துவம்</span> வாய்ந்த வெற்றியை (<strong>05 ஆசனங்கள்</strong>) <strong>தேசிய மக்கள் சக்திக்கு <a href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">வடபகுதியில்</a> பெற்றுதந்த எவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. </strong></p>



<p>வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமே இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும். இந்த மாகாணங்களில் <strong>காணாமல் ஆக்கப்பட்டோர்</strong>, <strong>மீள்குடியேற்றம்</strong>, <strong>புணர்வாழ்வு </strong>என பல முக்கிய விடயங்கள் <strong>இன்னும் தீர்க்கப்படாமல்</strong> உள்ளன. மேற்படி விடயங்கள்/பிரச்சனைகள் சிங்களப் பிரதேசங்களில் இல்லை. இதனை தேசிய மக்கள் சக்தி கருத்தில் எடுக்கவில்லைப் போல் தோன்றுகின்றது. </p>



<p>மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்துக்களுக்கான அமைச்சும் இந்த புதிய அமைச்சரவையில் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் <strong>பல நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் அழிவடைந்துள்ளன</strong>. சில வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலய பிரதேசங்களில் <strong>பெளத்த பிக்குகள் புத்தர் சிலையை வைக்க கடும் முயற்சிகள்</strong> மேற்கொண்டவண்ணமுள்ளனர். இது போன்ற மிக முக்கிய மற்றும் உணர்ச்சிமிக்க பிரச்சனைகளை கையாள தனி அமைச்சு அவசியம். மேலும்  பெளத்தர்களுக்கு புத்த சாசன அமைச்சு என தனியாக இருக்கும்போது, இந்து இஸ்லாமிய மக்களுக்கு தனியான அமைச்சுக்கள் இருப்பதில் தவறேதுமில்லை.</p>



<p>பிரதி அமைச்சுப் பதவிகள் வடபகுதி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p>புதிதாக <a href="https://pmd.gov.lk/news/the-new-prime-minister-and-cabinet-officially-sworn-in/" target="_blank" rel="noreferrer noopener">அமைச்சர்களாக</a> பதவியேற்றவர்களின் விபரங்கள் </p>



<figure class="wp-block-table"><table class="has-fixed-layout"><thead><tr><th>அமைச்சர்</th><th>அமைச்சு </th></tr></thead><tbody><tr><td>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா</td><td>பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்</td></tr><tr><td>பிரதமர் ஹரிணி அமரசூரியா</td><td>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி</td></tr><tr><td>விஜித ஹேரத்</td><td>சுற்றுலா, வெளிநாடு மற்றும் வெளிநாட்டலுவல்கள் </td></tr><tr><td>இராமலிங்கம் சந்திரசேகர்</td><td>கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம்</td></tr><tr><td>சரோஜா சாவித்திரி போல்ராஜ்</td><td>மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்</td></tr><tr><td>கே.டி.லால்காந்த</td><td>விவசாயம், நீர்ப்பாசனம், கா மற்றும் கால்நடை</td></tr><tr><td>நளிந்த ஜெயதிஸ்ஸ</td><td>சுகாதாரம் மற்றும் ஊடகம்</td></tr><tr><td>சுனில் குமார கமகே</td><td>விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகாரம்</td></tr><tr><td>பேராசிரியர் கிரிஷாந்த அபயசேன</td><td>விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்</td></tr><tr><td>பேராசிரியர் சந்தன அபேரத்ன</td><td>பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி</td></tr><tr><td>பேராசிரியர் ஹர்ஷன நாணயக்காரா</td><td>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு</td></tr><tr><td>பேராசிரியர் உபாலி பன்னிலகே</td><td>கிராம பாதுகாப்பு, சமூக பாதுகா மற்றும் சமூக வலுவூட்டல்</td></tr><tr><td>பேராசிரியர் அனில் ஜயந்த (f)பெர்னாண்டோ</td><td>தொழில் அமைச்சு</td></tr><tr><td>பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி</td><td>புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்</td></tr><tr><td>சுனில் ஹந்துன்நெத்தி</td><td>கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி</td></tr><tr><td>பிமல் ரத்நாயக்க</td><td>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவை</td></tr><tr><td>தம்மிக்க பட்டபெந்தி</td><td>சுற்றாடல்</td></tr><tr><td>குமார ஜெயக்கொடி</td><td>வலுசக்தி</td></tr><tr><td>வசந்த சமரசிங்க</td><td>வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப்பாதுகாப்பு</td></tr><tr><td>சமந்த வித்யரத்ன</td><td>பெருந்தோட்டம் மற்றும் சமூக அபிவிருத்தி</td></tr><tr><td>அநுர கருணாதிலக</td><td>நகர அபிவிருத்தி, நகர நிர்மாணிப்பு மற்றும் வீடமை</td></tr><tr><td>ஆனந்த விஜேபால</td><td>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்</td></tr></tbody></table></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-cabinet-srilanka/">முழுமை பெறாத அமைச்சரவை</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?</title>
		<link>https://puthinam.news/srilanka-parliament-election-npp-regime/</link>
					<comments>https://puthinam.news/srilanka-parliament-election-npp-regime/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Nov 2024 06:30:37 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Bribery commission]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Mahinda Regime]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10005</guid>

					<description><![CDATA[<p>இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 113 ஆசனங்கள் தேவை. இருப்பினும் திடமான அரசமைக்க குறைந்தது 130 ஆசனங்கள் இருந்தால்தான் ஐந்து வருடங்கள் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும். 2020 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எதிரொலியாக சிங்கள மக்கள் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-parliament-election-npp-regime/">தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.</p>



<p>தனித்து ஆட்சி அமைக்க 113 ஆசனங்கள் தேவை. இருப்பினும் திடமான அரசமைக்க குறைந்தது 130 ஆசனங்கள் இருந்தால்தான் ஐந்து வருடங்கள் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும்.</p>



<p>2020 நடைபெற்ற பாராளுமன்றத் <a href="https://puthinam.news/sri-lanka-parliament-election-results-2020/">தேர்தலில்</a>, மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எதிரொலியாக சிங்கள மக்கள் 68 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியிருந்தனர்.<strong> ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எனும் திடீர் அலை மூலம்</strong> தெரிவான பலமான அரசை, அதே சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் 2022இல் செயலிழக்கச் செய்திருந்தமையை நாம் இவ்விடத்தில் கோடிட்டு காட்ட வேண்டும்.</p>



<p>திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இலஞ்சம், ஊழல் அற்ற புதிய இலங்கையை உருவாக்கும் எனும் நம்பிக்கையில் சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. </p>



<p>2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வெறும் 445,958 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.<br>2020 இல் பொதுஜன பெரமுனவிற்கு சிங்கள மக்கள் கொடுத்த ஆதரவை இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேசிய மக்கள் சக்தி குறைந்தது 120 இலிருந்து 130 வரையிலான அல்லது அதற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற அதிக வாய்ப்புள்ளது. </p>



<p>ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பெரும்பாண்மை என்பன ஒரே கட்சியின் வசம் இருந்தால், இலங்கையில் மிகப் பலமான ஆட்சி அமையும். இப்படியான ஒரு நிலையில் தேசிய மக்கள் சக்தியினால் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியும். குறிப்பாக அரச செலவீனங்களின் குறைப்பு, அரச திணைக்களங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் வருமான இழப்புகளை சீர் செய்தல், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான தண்டனை, சிறப்பான கிராம அபிவிருத்தி போன்ற நாட்டிற்கு தேவையான பல நல்ல செயற்பாடுகள் இடம்பெறும்.</p>



<p>இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள்(மத்திய வங்கி உட்பட), ஊடகவியலாளர்களின் படுகொலைகள், ஈஸ்டர் குண்டு தாக்குதல், உகண்டாவிற்கு அனுப்பப்பட்ட டொலர்கள் என எல்லாவற்றையும் விசாரிப்பதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த, ரணில் மற்றும் கோத்தபாய உட்பட பலர் குற்றவாளிகளாக <strong>இனம் காட்டப்படலாம்</strong>!! <br>(இதற்காக சர்வர்தேசத்தின் மறைமுக எதிர்ப்பினை இலங்கை அரசு நிச்சயமாக எதிர்கொள்ளும்) </p>



<p>இருப்பினும் இலங்கையை ஆழுபவர்கள் தமது கைக்குள்ளே இருக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. அத்துடன் <em><strong>இலங்கையில் நடைபெறும் ஆட்சி நல்லதாக இருந்தால் சர்வதேசத்திற்கு பொறுக்காது. கெட்டதாக இருந்தால் மக்கள் போராட்டம் மூலம் ஆட்சி பலவீனப்படுத்தப்படும்</strong></em> எனும் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. எனவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!!!</p>



<p style="font-size:20px"><strong>முக்கிய குறிப்பு :</strong> முள்ளிவாய்க்கால் படுகொலை, போரினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், வடக்கு கிழக்கில் இராணுவ குறைப்பு போன்ற விடயங்கள் எக்காலத்திலும் இலங்கையில் இடம்பெற மாட்டாது என்பதை தமிழர்கள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/srilanka-parliament-election-npp-regime/">தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/srilanka-parliament-election-npp-regime/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</title>
		<link>https://puthinam.news/sjb-jaffna-election-itak/</link>
					<comments>https://puthinam.news/sjb-jaffna-election-itak/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Oct 2024 02:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sajith Premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9964</guid>

					<description><![CDATA[<p>சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார். தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sjb-jaffna-election-itak/">ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="511" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1024x511.webp" alt="sjb Jaffna election itak" class="wp-image-9965" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1024x511.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-300x150.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-768x383.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-842x420.webp 842w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-150x75.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-696x347.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb-1068x533.webp 1068w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/sjb.webp 1122w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார். </p>



<p>தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி தவிர்த்து) சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சஜித் பிரேமதாசாவை விட 4,489 வாக்குகள் மட்டுமே குறைவாகும்.</p>



<p>இவ்வாறானதொரு நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவது மேலும் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. </p>



<p>ஜனாதிபதி தேர்தலில் <strong>சஜித்திற்கு ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியே இம்முறை பாரிய <a href="https://puthinam.news/general-election-2020-jaffna/">சரிவைச்</a> சந்திக்கும் நிலையில் உள்ளது</strong>. மேலும் மற்றைய தமிழ்க் கட்சிகளின் வாக்குகளும் சரிவை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது.</p>



<p>அரசியல் நாகரீகம் கருதி, தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதைத் தவிர்த்தது போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். <strong>அல்லது சுமந்திரன் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்திருக்க வேண்டும்.</strong> </p>



<p>இன்னொரு கட்சியின் முடிவுகளில் சுமந்திரனை தலையிடும்படி எவரும் கேட்கவில்லை. தனது கட்சியிலுள்ள பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆதரவு கொடுக்கத் தெரிந்த சுமந்திரனுக்கு, தனது கட்சியின் வாக்கு வங்கிக்கே ஆப்பு வருகிறது என தெரியும்போது அதைத் தக்க வைக்க சஜித்துடன்  தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.</p>



<p>எமது தமிழ் அரசியல்வாதிகள் சேர்ந்தும் பயணிக்க மாட்டார்கள், எதிர்த்தும் அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்காண திராணி அற்றவர்களாகவே வடக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.</p>



<p>என்னதான் நேர்மை நீதி என இவர்கள் சொன்னாலும், அவர்கள் செய்வது புனிதமான அரசியல் இல்லை என்பதை யாழ்  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட சில ஆயிரம் வாக்குகள் சஜித் அணிக்குக் கிடைக்கலாம். </p>



<p><a href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">இந்த தேர்தல்</a> கடந்த கால தேர்தல்கள் போன்றதல்ல. 396பேர் போட்டியிடும் தேர்தலில், கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து, தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.</p>



<p class="has-text-align-center" style="font-size:23px">– <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> –</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sjb-jaffna-election-itak/">ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/sjb-jaffna-election-itak/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</title>
		<link>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/</link>
					<comments>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Oct 2024 00:50:52 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[C.V.Vigneswaran]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9903</guid>

					<description><![CDATA[<p>யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,&#160; மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-align-left">யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) <strong>மெத்தனமாக</strong> இருக்கும்போது,&nbsp; மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p>



<p>வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் <a href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனா</a>) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன.</p>



<p>பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீதான வடக்கு மக்களின் ஆதரவை கடுமையாக விமர்சித்திருந்தார். வட பகுதியில் ஓரளவு கட்டுக்கோப்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே திசைகாட்டியின் மக்கள் ஆதரவு சற்று அசைத்துப் பார்த்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், தமது வாக்குகள் உடையப் போவதை அவர் திறம்படக் கணித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு ஒப்பான ஒரு எழுச்சியை, வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு 17 உம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.&nbsp;தொடர்ச்சியான முகநூல் நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அர்ச்சுனா. பல உள்ளூர் YouTube தள இளைஞர்களும் அர்ச்சுனாவின் பிரச்சார பணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர். அர்ச்சுனாவும் இயன்றளவிற்கு அனைத்து உள்ளூர் YouTube தளங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். இவ்வாறானதொரு மக்களுடனான <strong>நெருங்கிய ஈடுபாட்டை</strong> எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதுவரை காட்டியதில்லை.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="665" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp" alt="election doctor archchuna jaffna" class="wp-image-9824" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-300x195.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-768x499.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-646x420.webp 646w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-150x97.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-696x452.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr.webp 1059w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>இந்த நிலையில் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் (மான் சின்னம்) வேட்பாளர் மிதிலைச் செல்வியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினை அர்ச்சுனா முகநூல் காணொளியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தார். அந்த நிகழ்வு தொடர்பாக அர்ச்சுனாவை பலர் கண்டித்திருந்த&nbsp;போதும், பலர் மிதிலைச் செல்வியையும் கண்டித்திருந்தனர். (இந்த நிகழ்வு தற்செயலான நிகழ்வா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நிகழ்வா என உறுதிபடத் தெரியவில்லை)</p>



<p>“பெண்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, <a href="https://www.facebook.com/eagle.feder.3" target="_blank" rel="noreferrer noopener">அர்ச்சுனா</a> ஒரு பெண்ணை அவமதித்து விட்டார் என்ற கோணத்திலும் ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சொல்வதைப் போல “பெண்” என்ற கருத்தை எடுத்தால், ஒரு பிரச்சனை இடம்பெறும் இடத்தில் ஏன் அந்த பெண்மணி அவ்வளவு நேரம்&nbsp; இருந்த்தார்?, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல, அந்த பெண்மணியும் விலகியிருக்க வேண்டுமல்லவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.</p>



<p>மிதிலைச் செல்வி தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினராக இருந்தவர். கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டி போடுவதாக தெரிவித்து, கடைசி நேரத்தில் தவிர்த்திருந்தது. இதனால் விசனமடைந்த மிதிலைச் செல்வி யாழில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் அணி தயார்படுத்தப்பட்டதால், மிதிலைச் செல்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்தும், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.&nbsp; எனவே இவர் உடனடியாகவே விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் (மான் சின்னம்) ஐக்கியமானார். இவர் தாய்க் கட்சிக்கு உண்மையாக இருந்திருந்தால், தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தவராசா அணியில் அல்லவா இடம்பெற்றிருக்க வேண்டும்??&nbsp;</p>



<p>மேலும், ஏற்கனவே அபலைப் பெண்ணிற்கு மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் (பார் லைசென்ஸ்) கொடுத்த விக்னேஷ்வரன் போன்று, மிதிலைச் செல்வியும் ஒரு கொழும்பு வரவு. கடந்த தேர்தல் போன்று இம்முறை தமக்கு வாக்குகள் கிடைக்கப் பெறாது என்பது மான் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். இதனால் கொழும்பு ஸ்ரைலில் “பெண்ணியம்” பேசி வாக்குகள் சேர்க்க முடிந்தளவு முயற்ச்சி செய்கிறார்கள் போலுள்ளது.</p>



<p>மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் போன்றவர்களின் துரதிஷ்டமோ என்னவோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, இப்போ மானிடம் மாட்டி தமது வெற்றியை தாமே&nbsp; கேள்விக்குறியாக்கியுள்ளனர்.&nbsp;இவர்கள் சுயேட்சையாகக் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம்.</p>



<p>தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மட்டுமே கருத்துக் கூறி வாக்குச் சேர்ப்பார்கள். ஆனால் மான் கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும், அர்ச்சுனாவிற்கு எதிராகவும் கருத்துக் கூறி வாக்கு சேர்க்கப் பார்ப்பார்கள்.&nbsp;இங்கே சிக்கல் என்னவெனில் தேசிய மக்கள் சக்தி சிங்கள தேசிய கட்சி என்றரீதியில் மக்கள் தவிர்த்தாலும், அர்ச்சுனாவை அவ்வாறு தவிர்க்க மாட்டார்கள். எனவே அர்ச்சுனாவிற்கெதிராக இவர்கள் எது செய்ய முற்பட்டாலும் அது அவர்களையே திருப்பத் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு என்பதை மான் கட்சியினர் புரிந்துகொண்டால் சரி.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</title>
		<link>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/</link>
					<comments>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 03:17:10 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9851</guid>

					<description><![CDATA[<p>வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார். படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார். வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/" target="_blank" rel="noreferrer noopener">சுயேட்சை</a> குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.</p>



<p><strong>படித்த-புதிய-இளம்</strong> வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார்.</p>



<p>வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் என ஏங்குபவர்களின் ஆதரவை அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="665" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp" alt="dr archchuna Jaffna election 2024" class="wp-image-9824" style="aspect-ratio:16/9;object-fit:cover" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-300x195.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-768x499.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-646x420.webp 646w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-150x97.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-696x452.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr.webp 1059w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>அர்ச்சுனா சமூக வலைத்தளங்களை மிகவும் திறமையாகக் கையாளுகின்றார். நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் மக்களுடன் நேரடித் தொடர்பாடலைப் பேணி வருவதால், மக்கள் மத்தியில் அர்ச்சுனாவின் புகழ் மெதுமெதுவாக உயர்வடைந்து செல்கின்றது.</p>



<p>எப்படியாவது உண்மையை மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக அர்ச்சுனா மாற்றி மாற்றி பல விடயங்களை முகநூல் <strong>நேரடிக் கானொளிகளில்</strong> பேசி வந்ததினால், பலருக்கு ஒரு குழப்பமான மற்றும் சலிப்புத் தன்மையான பார்வை அர்ச்சுனா மீது ஏற்பட்டிருந்தது.</p>



<p><em>இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், சாதாரண பதிவுகள் (posts), படங்கள்(photos), வீடியோக்களைக் காட்டிலும் நேரடிக் கானொளிகள் (live video) மட்டுமே சிறந்த சான்று/சாட்சியாக உள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அர்ச்சுனா இயன்றளவு எல்லாவற்றையும் நேரடிக் காணொளிகளில் பதிவிட்டு வருகிறார்.</em> உண்மையில் <strong>அர்ச்சுனாவை நோக்குவதை விடுத்து, அவர் கதைத்த/கதைக்கின்ற  விடயங்களை உற்று நோக்கினால், அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும்</strong> என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.</p>



<p>அர்ச்சுனா முகநூலில் உண்மைகளைக் கதைக்கும்போது ஏளனம் செய்தவர்கள், அவர் பாராளுமன்றில் கதைக்கும்போது ஏளனம் செய்ய முடியாது. பாராளுமன்றில் பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் பாராளுமன்ற பதிவேட்டில் ஏற்றப்படும்.</p>



<p>இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் இடம்பெற்ற அர்ச்சுனாவின் கைது மற்றும் அவரது சிறைவாசம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரது கைது மற்றும் சிறைவாசத்தின் பின்னர் நல்லதே நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற பேச்சுகள் மற்றும் நேரடி கானொளிகள் குறைவடைந்துள்ளதுடன், அர்ச்சுனாவும் சற்று சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.</p>



<p>ஒரு சாதாரண மனிதனுக்கு அரசியல் தீர்வு, தமிழ்த்தேசியம் போன்றவற்றிலும் பார்க்க, பக்கத்து தெருவில் நடக்கும் நிகழ்வு/பிரச்சனை மிக முக்கியம்/ஆபத்தானது. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சனையின்போது தமிழ்த் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? (டக்ளஸ் தேவானந்தா தவிர) <br><strong>மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டத்தில் நடக்கும் பாரிய மோசடிகள்/முறைகேடுகள் பற்றிக் கேட்பதற்கு உரிமை அல்லது அதிகாரம் இல்லையா????</strong> சாதாரண விதானைமார் செய்யும் மோசடிகளைக் கூட கேட்கும் திராணியற்றவர்களாகதான் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். </p>



<p>மேலும் தற்போதைய யாழ் தேர்தல் கள நிலவரத்தின்படி, பல கட்சிகள் சுயேட்ச்சைக் குழுக்கள் என 396 பேர் போட்டியிடுவதால் வாக்குகள் நாலா திசைகளிலும் சிதறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் <a href="https://www.facebook.com/eagle.feder.3?mibextid=LQQJ4d" target="_blank" rel="noreferrer noopener">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு இன்னும் <strong>சற்று முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், கடந்த 2020 தேர்தலில் C.V.விக்னேஷ்வரன் ஒரு ஆசனத்தைப் பெற்றது போன்று, அர்ச்சுனாவும் ஒரு ஆசனத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது!</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</title>
		<link>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/</link>
					<comments>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 02:26:47 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9841</guid>

					<description><![CDATA[<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது. ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.</p>



<p>தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.</p>



<p>ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p>



<p>தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன்  மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!</p>



<p>தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. <br>தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும், <br><span style="font-family: -webkit-standard; font-size: medium; white-space: normal;">தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை </span>எனவும், <br>அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும், <br>தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.</p>



<p>சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் <strong>பொதுநலத்துடன் சிந்தித்து</strong>  வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. <strong>தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். </strong></p>



<p><strong>வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே</strong> என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு <strong>இல்லாத</strong>, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.</p>



<p>கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் <strong>போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன்</strong> வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">&#8211; உங்கள் வாக்கு உங்கள் பலம் &#8211;</h2>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</title>
		<link>https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 02:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9831</guid>

					<description><![CDATA[<p>ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p>



<p>யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p>தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) அங்கம் வகித்து, இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் டெலோ, புளொட் போன்ற கட்சிகளையே சுமந்திரன் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். 90களில் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில் டெலோ மற்றும் புளொட் செய்த கொடுமைகளை சுமந்திரன் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.</p>



<p>அதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சுமந்திரன் &#8220;மாம்பழத் திருடர்கள்&#8221; என வர்ணித்துள்ளதுடன், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேணும் எனவும் கேட்டுள்ளார்.</p>



<p>அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுத்த C.V.விக்னேஷ்வரனையும் சுமந்திரன் விட்டுவைக்கவில்லை. (அபலைப் பெண் என C.V.விக்னேஷ்வரன் குறிப்பிட பெண் உண்மையில் அபலைப் பெண் அல்ல. அவர் கோடீஸ்வரி என்பது பலருக்குத் தெரியாது).</p>



<p>மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு பகிரங்க சவால் விட்ட சுமந்திரன், மதுபானசாலைக்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியுமா எனவும் கேட்டுள்ளார். அநுர அரசாங்கம் அந்த தகவல்களை வெளியிட்டால், அதில் <strong><span style="background-color:#e32a2a" class="td_text_highlight_marker">தன்னுடன் சேர்ந்து போட்டியிடும், தன்னுடன் முழுமையாக ஒத்துழைக்காத ஶ்ரீதரனுடைய பெயர் இருந்தால்</span></strong>,ஶ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய பின்னடவு ஏற்படலாம் என  சுமந்திரன் கருதி இருக்கலாம்!! இதன் மூலம் ஶ்ரீதரனையும் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம் கட்டலாம் என சுமந்திரன் கணக்கு போட்டிருக்கலாம்!!</p>



<p>கடந்த தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் ஶ்ரீதரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் அவர் தொடர்ந்தும் சுமந்திரனின் வழியில் முழுமையாகச் செல்லாமல், மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், புளொட், டெலோவுடனும் நட்பைப் பேணி வருகிறார். மேலும் <span style="background-color:#ce3333" class="td_text_highlight_marker">ஶ்ரீதரன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை அவசர அவசரமாக சென்று சந்தித்தன் காரணமும் சற்று மர்மமாகவே உள்ளது.</span> </p>



<p>தமிழருக்கு தமிழ்க் கட்சிகளால் இதுவரை எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை. 2015ல் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசுடன் மிக மிக நெருக்கமாக இருந்தும் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம், அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியாத நிலமையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வாறு பாரம்பரிய கட்சிகளை நம்புவது என்பதும் இன்று தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.</p>



<p><span style="background-color:#f20a0a" class="td_text_highlight_marker">சட்டப் புலமை கொண்ட சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாறுவாரா, சிதைத்துவிடுவாரா என்ற ஒரு பாரிய சந்தேகமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது.</span> புலம்பெயர் தமிழர்கள், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரினதும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ள சுமந்திரன், இம்முறை தேர்தலில் <a href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">புதியவர்களுடன்</a> களம் இறங்குகின்றார். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது என்பதை நவம்பர் 15ம் திகதி தெரிந்துகொள்வோம்.</p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் களம் 2024</title>
		<link>https://puthinam.news/parliament-election-2024-jaffna/</link>
					<comments>https://puthinam.news/parliament-election-2024-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Oct 2024 07:56:15 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9806</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.</p>



<p>ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என <strong>396</strong>பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.</p>



<p>ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழரசுக் கட்சி (</strong>சின்னம் வீடு<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை <strong>இழந்திருந்தது</strong>. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் <a href="https://puthinam.news/itak-election-candidates/">ஆதிக்கம்</a>, அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.</p>



<p>யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (</strong>சின்னம் சைக்கிள்<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் <strong>பெற்</strong>று <a href="https://puthinam.news/election-2020-north-east/">மாவட்டரீதியில்</a> இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.</p>



<p>கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் <strong>சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை</strong> என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>அங்கஜன் அணி(</strong>தபால் பெட்டி<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>



<p>இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>



<p style="font-size:25px"><strong>EPDP (</strong><strong>வீணை</strong><strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p style="font-size:25px"><strong>தேசிய மக்கள் சக்தி (</strong>திசை காட்டி<strong>)</strong></p>



<p>இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.</p>



<p>நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை &#8220;<strong>சிங்கள</strong>&#8221; கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.&nbsp;</p>



<p>மேலும்,<strong>மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள்.</strong> எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p>இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும். </p>



<p>குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!</p>



<p class="has-text-align-center" style="font-size:29px">&#8211; <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> &#8211;</p>



<figure class="wp-block-pullquote" style="font-size:28px"><blockquote><p><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/" target="_blank" rel="noreferrer noopener">பாராளுமன்றத் தேர்தல் 2020<br>யாழ் மாவட்டம்</a></p></blockquote></figure>



<p></p>



<p></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/parliament-election-2024-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</title>
		<link>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/</link>
					<comments>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Oct 2024 01:03:29 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9790</guid>

					<description><![CDATA[<p>வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் கொழும்புக் கிளை [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது.</p>



<p>கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால்  சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>



<p>மேலும், கட்சியின் கொழும்புக் கிளை பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதால், அவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பல இளம் படித்த இளைஞர்களும், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவை எதிர்த்து கட்சியில் இருந்து தாம் விலகுவதாக சமூக வலைத்தள்ங்களில் தெரிவித்து வருகின்றனர். (இவர்கள் எல்லோரும் வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை!!!!)</p>



<p>கடந்த <strong><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/">2020</a> </strong>பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிராஜின் மனைவியும் தனக்கு வேட்பு மனு கிடைக்காததால், தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் (சங்கு சின்னம்) இணைந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.</p>



<p>தமிழரசுக் கட்சியின் இந்த முடிவிற்கு சுமந்திரன் ஒரு பிரதான காரணியாக இருக்கிறார் என்பது கட்சிக்காரர்களுக்குத் தெரிந்த போதும், அவரை எதிர்க்க முடியாத அளவிற்கு சுமந்திரன் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்தியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவிற்குப்பின்னர் இடம்பெறும் முதல் பொதுத்தேர்தலிலேயே கட்சிக்குள் பல பிரச்சனைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.</p>



<p>தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்குப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததால், ஏனைய தமிழ்க் கட்சிகளான புளொட், டெலோ, EPRLF, விக்கி அணி போன்றன முதலே தமிழரசுக் கட்சியினுடைய தொடர்புகளைத் துண்டித்து, தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.</p>



<p>&#8220;வீடு&#8221; சின்னத்திற்கு (மட்டும்) மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இருப்பினும் சங்கு, சைக்கிள், EPDP, அங்கஜன் அணி, CV.விக்னேஸ்வரன் அணி என பலத்த <a href="https://puthinam.news/general-election-2020-jaffna/"><strong>சவால்களுக்கு</strong></a> அப்பால், <strong>ஜனாதிபதி அநுரவின் திசைகாட்டியின்</strong>(NPP) செல்வாக்கையும் வீடு (தமிழரசுக் கட்சி) சமாளிக்க வேண்டும்.</p>



<p>சுமந்திரனின் சகாக்களாக களமிறங்கும் வேட்பாளர்கள் படித்த, ஓரளவு செல்வாக்குடைய புதிய வேட்பாளர்களாக இருப்பினும், யாழ் மக்கள் மத்தியில் இவர்கள் தொடர்பான கருத்து/நிலைபாடு என்ன என்பதை வரும் நவம்பர் 15ம் திகதி நாம் அறிந்து கொள்ளலாம்.</p>



<p>யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் விபரம்<br>1-M.A.சுமந்திரன்<br>2-S.ஶ்ரீதரன்<br>3-E.ஆனோல்ட்<br>4-K.சயந்தன்<br>5-S.சுகிர்தன்<br>6-S.C.C.இளங்கோவன்<br>7-சுரேக்கா.S<br>8-கிருஷ்ணவேணி.S<br>9-T.பிரகாஷ்</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/itak-jaffna-candidates-2024/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</title>
		<link>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/</link>
					<comments>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Oct 2024 12:40:59 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9769</guid>

					<description><![CDATA[<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார். 2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட <a href="https://puthinam.news/anura-kumara-dissanayake-president/">அநுர</a> குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.</p>



<p>2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். </p>



<p>வட மாகாணத்தில் உள்ளூர் <strong>அரசியல்வாதிகளின் இயலாமை</strong> மற்றும் <strong>ஒன்றுமையின்மையைப்</strong> பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது</strong> என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.</p>



<p>இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.</p>



<p>&#8220;தமிழ் தேசியம்&#8221; , &#8220;தமிழருக்கான உரிமை&#8221;, &#8220;தமிழருக்கான தீர்வு&#8221; என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.</p>



<p>வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்</strong>. அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.</p>



<p>பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
