புதினம்

பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் பிரதான பாதைகள் முற்றாக மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பாணந்துறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் காலி வீதியை முற்றாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொழும்பு காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தம்புள்ள நகரப் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தால்...

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..

சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார். இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல...

சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை

சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர். பல...

இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தளர்த்தபடும் கோவிட் கட்டுப்பாடுகளாவன, 1-பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.2-அலுவலகங்கள்...

வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. இருப்பினும், பதவியேற்ற அனைவரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மைகள் என அனைவரும் அறிவர். புதுவருடத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக அரசியலிலும் சரி, மக்களின் போராட்டங்களிலும் சரி பெரிதாக ஒரு நகர்வுகளும் இடம்பெறவில்லை. இன்று முதல்...

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 443பேர் உயிரிழப்பு

கடந்த சில நாட்களாக தென்னாபிரிக்காவின் குவாசுலு-நாடல் மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இதுவரை 443பேர் உயிரிழந்து, பலர் காணாமல் போயுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் ஆபிரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான டர்பன்...

புதிய அமைச்சரவை பதவியேற்றது

கடந்த இரு வாரங்களாக அமைச்சர்கள் இன்றி இயங்கிய இலங்கை அரசாங்கத்தில், இன்று புதிய அமைச்சர்கள் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர். பதவியேற்ற அமைச்சர்களின் விபரம் வருமாறு, 1.தினேஷ் குணவர்த்தன - பொதுச்சேவைகள், உள்விவகாரம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றம் 2.பிரசன்ன ரணதுங்க - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை 3.காஞ்சன விஜேவிக்ரம - மின்சக்தி 4.டக்ளஸ் தேவானந்தா...

யாழில் தீப்பந்தப் போராட்டம்

நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்தப் போராடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனநாயகத்திற்காக ஒன்றினைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். யாழ் பண்ணை பாலம் அருகே...

எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளாகத் தொடர்கிறது. அரசியல் தலையீடு இன்றி இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டம் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்த அமைதி வழி ஆர்ப்பாட்டதில், நேற்று வேடுவர் சமூகமும் தம்மை இணைந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே...

கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) தெரிவித்துள்ளது. இதன்படி வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதிவரை கொழும்பு பங்குச் சந்தை செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Security and Exchange Commission) வெளியிட்டுள்ள...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img