இலங்கையில் தொடர் மழை, நால்வர் உயிரிழப்பு, 71,000 குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் இதுவரை 71,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். 

சீரற்ற காலநிலை தொடர்வதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles