22 வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் கைது, காவல்துறையினருக்கும் தொடர்பாம் !!

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு அசம்பாவிதங்கள் தொடர்பாக இதுவரை 22 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மானிப்பாய் பிரதேச காவல்துறையினர், தென்மராட்சிப்பகுதியில் நடத்திய இரகசிய நடவடிக்கையில் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கும், தென்மராட்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றும் பணிபுரிந்த சில காவல்துறை உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருப்பதாக மானிப்பாய் பிரதேச காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles