இலங்கையில் நாடாளாவியரீதியில் இன்று (04/07) அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
அதிபர், ஆசிரிய நியமங்களில் அரசியல் தலையீடுகளை நிறுத்தக்கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைசர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்தே இந்த ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.