இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்று (08/03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
மொனராகலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார, முன்னரும் அமைசச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கையில் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இந்த அமைச்சுப் பதவி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.