ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெற் தொடர் 14ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி50 ஓவர்கள் முடிவில், 8 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப் பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக A.J.பி(f)ன்ச் 107 ஓட்டங்களையும், M.P.ஸ்டோனிஸ் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி, 48.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலாந்து அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் JJ.ரோய் 180 ஓட்டங்களையும், JE.ரூட் 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக JJ.ரோய் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது ஒரு நாள் போட்டி 19ம் திகதி பிறிஸ்பேனில் நடைபெறவுள்ளது.