இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் திரு.ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஜோன் பிலிப் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை படையினருடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவதில் எவ்வித தயக்கமுமில்லை. இருப்பினும் இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான போர்க் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்

Latest articles

Similar articles