தம்பி பிரபாகரன் வழியில் EPRLF இற்கு பாவமன்னிப்பு வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சற்று இறங்கி வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
மக்களிடம் செல்வாக்கு இழந்த கட்சியாக உள்ள EPRLFற்கு C.V.விக்னேஸ்வரன் முக்கியத்துவம் கொடுப்பதால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை, எதையும் சாதிக்கவும் முடியாது.
இருபினும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அழுத்தங்களினால் முன்னாள் முதல்வர் முழு விருப்பமின்றி EPRLF உடன் நட்பு பாராட்டலாம்!!
இருப்பினும் மற்ற காட்சிகள் பற்றி அவர் குறிப்பிடாமல் இருப்பது அவருக்குதான் நன்மை பயக்கும். தேர்தல் நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதல்வரின் நகர்வுகளை மக்கள் நன்றாகவே அவதனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
மேலும் EPRLF இந்திய ராணுவத்துடன் இணைந்து பிந்திய எண்பதுகளில் மேற்கொண்ட அட்டூழியங்களை எவரும் மறக்க மாட்டார்கள்.
அதேவேளை டெலோ, புளொட் வவுனியா, மன்னாரில் செய்த அட்டூழியங்களையும் எவரும் மறக்க மாட்டார்கள் என்பதனையும் முன்னாள் முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும்