சட்டவிரோதமாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட மூன்று தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான விசா மூலம் இங்கிலாந்து செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் மல்லாவியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைது செய்து குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.