131 பேருடன் ஆஸ்திரேலியா செல்லவிருந்த கப்பல் இடைமறிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்லவிருந்த 13 பேரை கப்பலிலிருந்து மீட்டுள்ளதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் அடங்குவதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனித கடத்தலுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள், நான்கு இந்தோனிசியர்கள் மற்றும் ஒன்பது மலேசியர்கள் விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வரும் எவருக்கும் அகதி அந்தஸ்து கொடுப்பதில்லை என்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles