<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TNPF &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/tnpf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 16 Nov 2024 00:48:56 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>TNPF &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</title>
		<link>https://puthinam.news/jaffna-preferred-votes-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Nov 2024 00:40:12 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10017</guid>

					<description><![CDATA[<p>2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-preferred-votes-2024/">யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது <a href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">தேசிய மக்கள் சக்தி</a>. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.</p>



<p>முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். </p>



<p>இதேவேளை வைத்தியர் <a href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவுடன்</a> இணைந்து போட்டியிட்ட சட்டத்தரணி கெளசல்யா 15,789 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமந்திரன் (15,039 வாக்குகள்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) ஆகியோர் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கெளசல்யா பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின்  முழுமையான விருப்பு வாக்குகள் விபரம் இதோ.</p>



<figure class="wp-block-image size-full"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="768" src="https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE.jpg" alt="Jaffna preferred votes 2024" class="wp-image-10018" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE.jpg 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-300x225.jpg 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-768x576.jpg 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-560x420.jpg 560w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-80x60.jpg 80w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-150x113.jpg 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/11/tempImagezyf2oE-696x522.jpg 696w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/jaffna-preferred-votes-2024/">யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</title>
		<link>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/</link>
					<comments>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Oct 2024 00:50:52 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[C.V.Vigneswaran]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9903</guid>

					<description><![CDATA[<p>யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,&#160; மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="has-text-align-left">யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) <strong>மெத்தனமாக</strong> இருக்கும்போது,&nbsp; மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p>



<p>வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் <a href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனா</a>) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன.</p>



<p>பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீதான வடக்கு மக்களின் ஆதரவை கடுமையாக விமர்சித்திருந்தார். வட பகுதியில் ஓரளவு கட்டுக்கோப்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே திசைகாட்டியின் மக்கள் ஆதரவு சற்று அசைத்துப் பார்த்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், தமது வாக்குகள் உடையப் போவதை அவர் திறம்படக் கணித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு ஒப்பான ஒரு எழுச்சியை, வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு 17 உம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.&nbsp;தொடர்ச்சியான முகநூல் நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அர்ச்சுனா. பல உள்ளூர் YouTube தள இளைஞர்களும் அர்ச்சுனாவின் பிரச்சார பணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர். அர்ச்சுனாவும் இயன்றளவிற்கு அனைத்து உள்ளூர் YouTube தளங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். இவ்வாறானதொரு மக்களுடனான <strong>நெருங்கிய ஈடுபாட்டை</strong> எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதுவரை காட்டியதில்லை.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="665" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp" alt="election doctor archchuna jaffna" class="wp-image-9824" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-300x195.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-768x499.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-646x420.webp 646w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-150x97.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-696x452.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr.webp 1059w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>இந்த நிலையில் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் (மான் சின்னம்) வேட்பாளர் மிதிலைச் செல்வியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினை அர்ச்சுனா முகநூல் காணொளியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தார். அந்த நிகழ்வு தொடர்பாக அர்ச்சுனாவை பலர் கண்டித்திருந்த&nbsp;போதும், பலர் மிதிலைச் செல்வியையும் கண்டித்திருந்தனர். (இந்த நிகழ்வு தற்செயலான நிகழ்வா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நிகழ்வா என உறுதிபடத் தெரியவில்லை)</p>



<p>“பெண்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, <a href="https://www.facebook.com/eagle.feder.3" target="_blank" rel="noreferrer noopener">அர்ச்சுனா</a> ஒரு பெண்ணை அவமதித்து விட்டார் என்ற கோணத்திலும் ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சொல்வதைப் போல “பெண்” என்ற கருத்தை எடுத்தால், ஒரு பிரச்சனை இடம்பெறும் இடத்தில் ஏன் அந்த பெண்மணி அவ்வளவு நேரம்&nbsp; இருந்த்தார்?, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல, அந்த பெண்மணியும் விலகியிருக்க வேண்டுமல்லவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.</p>



<p>மிதிலைச் செல்வி தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினராக இருந்தவர். கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டி போடுவதாக தெரிவித்து, கடைசி நேரத்தில் தவிர்த்திருந்தது. இதனால் விசனமடைந்த மிதிலைச் செல்வி யாழில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் அணி தயார்படுத்தப்பட்டதால், மிதிலைச் செல்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்தும், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.&nbsp; எனவே இவர் உடனடியாகவே விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் (மான் சின்னம்) ஐக்கியமானார். இவர் தாய்க் கட்சிக்கு உண்மையாக இருந்திருந்தால், தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தவராசா அணியில் அல்லவா இடம்பெற்றிருக்க வேண்டும்??&nbsp;</p>



<p>மேலும், ஏற்கனவே அபலைப் பெண்ணிற்கு மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் (பார் லைசென்ஸ்) கொடுத்த விக்னேஷ்வரன் போன்று, மிதிலைச் செல்வியும் ஒரு கொழும்பு வரவு. கடந்த தேர்தல் போன்று இம்முறை தமக்கு வாக்குகள் கிடைக்கப் பெறாது என்பது மான் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். இதனால் கொழும்பு ஸ்ரைலில் “பெண்ணியம்” பேசி வாக்குகள் சேர்க்க முடிந்தளவு முயற்ச்சி செய்கிறார்கள் போலுள்ளது.</p>



<p>மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் போன்றவர்களின் துரதிஷ்டமோ என்னவோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, இப்போ மானிடம் மாட்டி தமது வெற்றியை தாமே&nbsp; கேள்விக்குறியாக்கியுள்ளனர்.&nbsp;இவர்கள் சுயேட்சையாகக் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம்.</p>



<p>தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மட்டுமே கருத்துக் கூறி வாக்குச் சேர்ப்பார்கள். ஆனால் மான் கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும், அர்ச்சுனாவிற்கு எதிராகவும் கருத்துக் கூறி வாக்கு சேர்க்கப் பார்ப்பார்கள்.&nbsp;இங்கே சிக்கல் என்னவெனில் தேசிய மக்கள் சக்தி சிங்கள தேசிய கட்சி என்றரீதியில் மக்கள் தவிர்த்தாலும், அர்ச்சுனாவை அவ்வாறு தவிர்க்க மாட்டார்கள். எனவே அர்ச்சுனாவிற்கெதிராக இவர்கள் எது செய்ய முற்பட்டாலும் அது அவர்களையே திருப்பத் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு என்பதை மான் கட்சியினர் புரிந்துகொண்டால் சரி.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/">அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/election-doctor-archchuna-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் களம் 2024</title>
		<link>https://puthinam.news/parliament-election-2024-jaffna/</link>
					<comments>https://puthinam.news/parliament-election-2024-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Oct 2024 07:56:15 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9806</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.</p>



<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.</p>



<p>ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என <strong>396</strong>பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.</p>



<p>ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழரசுக் கட்சி (</strong>சின்னம் வீடு<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை <strong>இழந்திருந்தது</strong>. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் <a href="https://puthinam.news/itak-election-candidates/">ஆதிக்கம்</a>, அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.</p>



<p>யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (</strong>சின்னம் சைக்கிள்<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் <strong>பெற்</strong>று <a href="https://puthinam.news/election-2020-north-east/">மாவட்டரீதியில்</a> இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.</p>



<p>கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் <strong>சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை</strong> என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.</p>



<p style="font-size:25px"><strong>அங்கஜன் அணி(</strong>தபால் பெட்டி<strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>



<p>இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>



<p style="font-size:25px"><strong>EPDP (</strong><strong>வீணை</strong><strong>)</strong></p>



<p>2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p style="font-size:25px"><strong>தேசிய மக்கள் சக்தி (</strong>திசை காட்டி<strong>)</strong></p>



<p>இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.</p>



<p>நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை &#8220;<strong>சிங்கள</strong>&#8221; கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.</p>



<p>தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.&nbsp;</p>



<p>மேலும்,<strong>மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள்.</strong> எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p>இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும். </p>



<p>குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!</p>



<p class="has-text-align-center" style="font-size:29px">&#8211; <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> &#8211;</p>



<figure class="wp-block-pullquote" style="font-size:28px"><blockquote><p><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/" target="_blank" rel="noreferrer noopener">பாராளுமன்றத் தேர்தல் 2020<br>யாழ் மாவட்டம்</a></p></blockquote></figure>



<p></p>



<p></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/parliament-election-2024-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</title>
		<link>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/</link>
					<comments>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Oct 2024 12:40:59 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[Northern Province]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9769</guid>

					<description><![CDATA[<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார். 2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட <a href="https://puthinam.news/anura-kumara-dissanayake-president/">அநுர</a> குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.</p>



<p>2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள். </p>



<p>வட மாகாணத்தில் உள்ளூர் <strong>அரசியல்வாதிகளின் இயலாமை</strong> மற்றும் <strong>ஒன்றுமையின்மையைப்</strong> பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது</strong> என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.</p>



<p>இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.</p>



<p>&#8220;தமிழ் தேசியம்&#8221; , &#8220;தமிழருக்கான உரிமை&#8221;, &#8220;தமிழருக்கான தீர்வு&#8221; என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.</p>



<p>வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், <strong>வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்</strong>. அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.</p>



<p>பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/">ஜனாதிபதி தேர்தல் சாபக்கேடு &#8211; வடக்கு கிழக்கு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/presidential-election-2024-north-east-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மொனம் கலைத்த மணிவண்ணன்</title>
		<link>https://puthinam.news/manivannan-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Oct 2020 01:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5416</guid>

					<description><![CDATA[<p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக மணிவண்ணன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இதன்போது தனது பக்க நியாங்களை முன்வைத்த மணிவண்ணன், கட்சியின் தலமைமீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். https://www.facebook.com/watchparty/1065910273827351</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/">மொனம் கலைத்த மணிவண்ணன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><a rel="noreferrer noopener" href="https://en.wikipedia.org/wiki/Tamil_National_People&#039;s_Front" target="_blank">தமிழ் தேசிய மக்கள் முன்னணியி</a>ல் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக <a href="https://puthinam.news/manivannan-press-conference/">மணிவண்ணன்</a> ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.<br><br>இதன்போது தனது பக்க நியாங்களை முன்வைத்த மணிவண்ணன், கட்சியின் தலமைமீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். </p>



<figure class="wp-block-embed-youtube wp-block-embed is-type-video is-provider-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class="wp-block-embed__wrapper">
<div class="youtube-embed" data-video_id="mUi4OLXb-KQ"><iframe title="நிதி விவகாரமே தூக்கியடிக்க காரணம் - மணி" width="696" height="392" src="https://www.youtube.com/embed/mUi4OLXb-KQ?feature=oembed&#038;enablejsapi=1&#038;enablejsapi=1" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></div>
</div></figure>



<p><a href="https://www.facebook.com/watchparty/1065910273827351" target="_blank" rel="noopener">https://www.facebook.com/watchparty/1065910273827351</a></p>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/">மொனம் கலைத்த மணிவண்ணன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்</title>
		<link>https://puthinam.news/manivannan-tnpf-jaffna/</link>
					<comments>https://puthinam.news/manivannan-tnpf-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Sep 2020 02:03:30 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5366</guid>

					<description><![CDATA[<p>மணிவண்ணன் கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால், அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். மேலும் இனிவரும் காலங்களின் அவர் கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ பாவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் முலமாகவும், பதிவுத் தபால் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மேலதிக தகவல்களை ஒழுக்காற்று விசாரனை முடிவுற்ற [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-tnpf-jaffna/">மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><a href="https://puthinam.news/manivannan-press-conference/">மணிவண்ணன்</a> கட்சியின் கொள்கையை மீறியதுடன், கட்சியின் தலைமைக்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டதால், அவர் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக <a href="https://en.wikipedia.org/wiki/Tamil_National_People&#039;s_Front" target="_blank" rel="noreferrer noopener">தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்</a> தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.<br><br>மேலும் இனிவரும் காலங்களின் அவர் கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ பாவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணிவண்ணனுக்கு மின்னஞ்சல் முலமாகவும், பதிவுத் தபால் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.</p>



<p>மேலதிக தகவல்களை ஒழுக்காற்று விசாரனை முடிவுற்ற பின்னர் தெரியப்படுத்தப்படும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.</p>



<figure class="wp-block-embed-wordpress wp-block-embed is-type-wp-embed is-provider-puthinam-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="0VoEL9czoy"><a href="https://puthinam.news/manivannan-press-conference/">நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் &#8211; மணிவண்ணன்</a></blockquote><iframe loading="lazy" class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் &#8211; மணிவண்ணன்&#8221; &#8212; Puthinam NEWS" src="https://puthinam.news/manivannan-press-conference/embed/#?secret=0VoEL9czoy" data-secret="0VoEL9czoy" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>



<figure class="wp-block-embed-wordpress wp-block-embed is-type-wp-embed is-provider-puthinam-news"><div class="wp-block-embed__wrapper">
<blockquote class="wp-embedded-content" data-secret="kveSLTx4ly"><a href="https://puthinam.news/manivannan-jaffna-tnpf/">முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?</a></blockquote><iframe loading="lazy" class="wp-embedded-content" sandbox="allow-scripts" security="restricted"  title="&#8220;முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?&#8221; &#8212; Puthinam NEWS" src="https://puthinam.news/manivannan-jaffna-tnpf/embed/#?secret=kveSLTx4ly" data-secret="kveSLTx4ly" width="600" height="338" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no"></iframe>
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-tnpf-jaffna/">மணிவண்ணன் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து முழுமையாக நீக்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/manivannan-tnpf-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் &#8211; மணிவண்ணன்</title>
		<link>https://puthinam.news/manivannan-press-conference/</link>
					<comments>https://puthinam.news/manivannan-press-conference/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2020 23:14:28 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5320</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலத்தப்பட்ட மணிவண்ணன், தான் தொடர்ந்தும் அப்பதவிகளை வகிப்பதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். தன்னை பதவி நீக்கம் செய்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது, எனவே நான் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார். கட்சியினால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் மறுப்பதாகவும், அது தொடர்பான பதில் கடிதத்தினை தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியம் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-press-conference/">நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் &#8211; மணிவண்ணன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலத்தப்பட்ட <a href="mhttps://puthinam.news/manivannan-jaffna-tnpf/">மணிவண்ணன்</a>, தான் தொடர்ந்தும் அப்பதவிகளை வகிப்பதாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.<br><br>தன்னை பதவி நீக்கம் செய்தமை ஜனநாயகத்திற்கு விரோதமானது, எனவே நான் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளராக தொடர்வேன் என தெரிவித்துள்ளார். கட்சியினால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் மறுப்பதாகவும், அது தொடர்பான பதில் கடிதத்தினை தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.<br><br>தமிழ் தேசியம் நலிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட மணிவண்ணன், தான் கட்சியிலிருந்து விலகி தனி வழி சென்று மேலும் தமிழ் தேசியத்தை நலிவடையச் செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.<br><br>இந்த <a href="https://www.facebook.com/VishnuTNPF/videos/736766427164106" target="_blank" rel="noreferrer noopener">ஊடக</a> சந்திப்பில் கட்சியின் வேறு உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றியிருக்கவில்லை. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளுக்கு இதுவரை வேறு ஒருவரும் கட்சியினால் நியமிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. </p>



<figure class="wp-block-embed-facebook wp-block-embed is-type-video is-provider-facebook"><div class="wp-block-embed__wrapper">
https://www.facebook.com/VishnuTNPF/videos/736766427164106
</div></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-press-conference/">நான் தொடர்ந்தும் கட்சியில் இருப்பேன் &#8211; மணிவண்ணன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/manivannan-press-conference/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?</title>
		<link>https://puthinam.news/manivannan-jaffna-tnpf/</link>
					<comments>https://puthinam.news/manivannan-jaffna-tnpf/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2020 06:06:41 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5299</guid>

					<description><![CDATA[<p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது. மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் புலம்பெயர் தேசத்திலிருந்து முன்னணிக்கு விரோதமானவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரப்பிரசாதங்கள் என இங்கே குறிப்பிடப்பட்டது தேர்தல் நிதியாக இருக்கலாம்!!! இருப்பினும் இது தொடர்பாக மணிவண்ணன் விரைவில் விளக்கம் (பொதுமக்களுக்கு) கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு வெளியே பல தீய சக்திகள் தமிழரின் அரசியல் அடித்தளத்தை சிதைக்க பல வழிகளிலும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-jaffna-tnpf/">முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது.</p>



<p>மணிவண்ணனிற்கெதிராக முன்னணியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் <strong>புலம்பெயர் தேசத்திலிருந்து முன்னணிக்கு விரோதமானவர்களிடமிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றதாக</strong> தெரிவிக்கப்பட்டுள்ளது. வரப்பிரசாதங்கள் என இங்கே குறிப்பிடப்பட்டது தேர்தல் நிதியாக இருக்கலாம்!!! இருப்பினும் இது தொடர்பாக மணிவண்ணன் விரைவில் விளக்கம் (பொதுமக்களுக்கு) கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>



<p>இலங்கைக்கு வெளியே பல தீய சக்திகள் தமிழரின் அரசியல் அடித்தளத்தை சிதைக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றன. யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எழுச்சியை துல்லியமாகக் கணிப்பிட்டு, மணிவண்ணனைப் பலிக்கடா ஆக்கி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிளவுபட வைப்பதற்கான ஒரு முயற்சியோ எனவும் எண்ணத் தோன்றுகிறது!<br><br>அண்மையில் தனியார் தொலைக்காட்சி பேடியொன்றில் சிவாஜிலிங்கம் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தன்னை புலம்பெயர் நாட்டிலிருந்து தொடர்புகொண்ட சிலர், முன்னணியுடன் இணைந்து போட்டியிருமாறும், அப்படிப் போட்டியிட்டால் தேர்தல் செலவிற்காக 50,000 பவுண்ட்ஸை <span style="color:#adb1b2" class="has-inline-color">(இலங்கை ரூபாயில் அண்ணளவாக 11,000,000.00)</span>  வழங்குவதாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.<br><br>இவ்வாறு பலர் புலம்பெயர் நாடுளில் இருந்து தாயகத்தில் தமிழரின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியானவர்களை புலனாய்வாளர்கள் இயக்குவதற்கும் சாத்தியமுள்ளது.</p>



<h4 class="wp-block-heading">மணிவண்ணன்</h4>



<p>சட்டத்தரனி மணிவண்ணன் ஒரு சிறந்த கல்வியாளர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும், பேச்சாளராகவும் பதவி வகித்து வந்தார். மேலும் <a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/">இம்முறை தேர்தலில்</a> போட்டியிட்டு 22,741 வாக்குகளையும் பெற்றிருந்தார். இவர் பெற்ற வாக்குகளும் முன்னணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்துள்ளது. குறிப்பாக இவர் பெற்ற வாக்குகளும் தேசிய பட்டியல் ஆசனம் கிடைப்பதற்கு பெரிதும் உதவியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.</p>



<p>&#8216;தனிமரம் தோப்பாகாது&#8217; என்பது போல மணிவண்ணன் தனித்து நின்று எதையும் செய்யமுடியாது. மக்களுக்கான தனது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ள அவர் ஒரு அமைப்பில் அல்லது கட்சியில் இணைந்துதான் செயற்பட வேண்டும். எனவே விரும்பியோ, விரும்பாமலோ, அவ் அமைப்பின் அல்லது கட்சியின் விதிமுறைகளின்படிதான் செயற்பட வேண்டும். <br><br>கட்சிக்குள் ஆயிரம் முரண்பாடான செயற்பாடுகள் இடம்பெறலாம். ஏனெனில் எல்லாமே &#8220;அரசியல்&#8221; கட்சிகள். அரசியல் கட்சிகள் எல்லாம் மக்களை வைத்துத்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மக்களுக்காக அரசியல் செய்யவில்லை.</p>



<p>இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த துரதிஷ்டவசமான நிலையில், மணிவண்ணன் மிகவும் தெளிவாகவும், தீர்க்கதரிசனத்துடனும் எதிர்கால அரசியல் தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். நிச்சயமாக பலர் தனிக்கட்சி தொடங்கச் சொல்லி அறிவுரைகள் வழங்குவார்கள். <span style="color:#0c79b4" class="has-inline-color">தனிக்கட்சி தொடங்கி, தன் அடையாளத்தை தொலைக்காமல், அவரது கொள்கைகளுக்கு நெருக்கமான கொள்கைகளைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து, தமிழ் மக்களுக்கு சேவை செய்யவதே </span>மணிவண்ணனுக்குள்ள சிறப்பானதொரு தெரிவாகும்.</p>



<h4 class="wp-block-heading">தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி</h4>



<p>நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் <a href="https://en.wikipedia.org/wiki/Tamil_National_People%27s_Front" target="_blank" rel="noreferrer noopener">முன்னணி</a> ஒரு ஆசனத்தை வென்றதுடன், தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. பல சவால்களின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பெறப்பட்ட மக்களின் பெரும் ஆதரவினை, மணிவண்ணனின் பதவி நீக்கம் தொடர்பான சர்ச்சைகளினால் இழப்பதற்கான வாய்ப்புள்ளது.<br><br>மேலும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த சர்ச்சையைக் கையாண்டவிதம் திருப்தியளிக்கவில்லை. கட்சிக்குள்ளேயே பிரச்சனைகளைத் தீர்த்திருக்க வேண்டும். மேலும், செயலாளர் கஜேந்திரன் பற்றி யாழ் மக்கள் நன்கறிவர். தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின்னர், தேசிய பட்டியல் ஆசனத்தை கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டதையும் மக்கள் விமர்சிக்கத் தவறவில்லை. அது உட்கட்சி விவகாரமாக இருப்பினும், மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் உண்மைத் தன்மையுடனும், மனச்சாட்சியுடனும் செயற்பட்டிருக்க வேண்டும்.<br><br>சொல்லி வைத்ததுபோல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிளவு, முன்னணிக்குள்ளும் பிளவு. அனந்தி சசிதரன் தனிக்கட்சி, சிவாஜிலிங்கம் தனிக்கட்சி. ஐங்கரநேசன் ஒரு பக்கம், சந்திரகுமார் இன்னொரு பக்கம். இப்படியே ஒற்றுமையின்றி எல்லாத் திசைகளிலும் சிதறி, தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு இன்னொரு பிரபாகரன்தான் தேவை என்பதை தமிழ்க் கட்சிகளின் இந்த செயற்பாடுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/manivannan-jaffna-tnpf/">முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/manivannan-jaffna-tnpf/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</title>
		<link>https://puthinam.news/general-election-2020-jaffna/</link>
					<comments>https://puthinam.news/general-election-2020-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2020 12:59:02 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[General Election 2020]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=5239</guid>

					<description><![CDATA[<p>யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (சின்னம் &#x1f41f;) 35,927 வாக்குகளைப் பெற்று ஒரு [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/general-election-2020-jaffna/">யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span style="color:#252626" class="has-inline-color">யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான <a href="https://puthinam.news/election-2020-north-east/">நாடாளுமன்ற தேர்தலில்</a> கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான <a href="https://en.wikipedia.org/wiki/Tamil_National_People%27s_Front" target="_blank" rel="noreferrer noopener">தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி</a>, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.</span></p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="656" src="https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1024x656.png" alt="" class="wp-image-5240" srcset="https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1024x656.png 1024w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-300x192.png 300w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-768x492.png 768w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-1536x984.png 1536w, https://puthinam.news/wp-content/uploads/2020/08/tna-1-1-2048x1311.png 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட <span style="color:#35687e" class="has-inline-color">தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி</span> (சின்னம் <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f41f.png" alt="🐟" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />) <strong>35,927</strong> வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் யாழ் மக்கள் அங்கீகரித்து ஒரு ஆசனத்தைப் பெறச் செய்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>



<p>2015 நாடாளுமன்ற தேரத்லுடன் ஒப்பிடும்போது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சி <span style="color:#f9063a" class="has-inline-color"><strong>94,590</strong></span> வாக்குகளை இழந்துள்ளது. இது ஒரு மாபெரும் இழப்பாகும். <br><br>நல்லாட்சி அரசின் முழு ஆசீர்வாதம் இருந்திருந்தும் எதையுமே மக்களுக்குப் பெரிதாகச் செய்திராமை, பழைய வேட்பாளர்களே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை போன்ற காரணங்களால் இம்முறை மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியாமல் போயுள்ளது.</p>



<h5 class="wp-block-heading">தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி</h5>



<p>தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி <span style="color:#6b7883" class="has-inline-color">(சின்னம் <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f6b2.png" alt="🚲" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />)</span> பல சவால்களின் மத்தியில் போட்டியிட்டு, யாழ் தேர்தல் மாவட்டத்தில் <strong>55,303</strong> வாக்குகளப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது ஏறக்குறைய 268% அதிகரிப்பாகும். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒது இமாலய சாதனையாகும். மேலும் தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தை வென்று, மொத்தமாக இரு ஆசனக்களைக் கைப்பற்றி தம்மை மிகவும் வலுப்படுத்தியுள்ளனர்.<br><br><strong>கிளிநொச்சி</strong> மாவட்டம் மற்றும் ஊர்காவற் தொகுதி (<strong>தீவகப்</strong> பகுதிகளில்) தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. <span style="color:#f00f38" class="has-inline-color">அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. </span>கிளிநொச்சி மாவட்டத்தில் வெறும் 2,528 வாக்குகளையே பெற்றுள்ளார்கள். இதேவேளை ஊர்காவற்துறை தொகுதியில் 1,376 வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.<br><br>கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>



<h5 class="wp-block-heading">ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி</h5>



<p>ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த மட்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான <a href="https://en.wikipedia.org/wiki/Murugesu_Chandrakumar" target="_blank" rel="noreferrer noopener"><span style="color:#064662" class="has-inline-color">முருகேசு சந்திரகுமார்</span></a> இம்முறை தனித்து சுயாதீனமாகப் போட்டியிட்டதால், வாக்கு வங்கியில் சரிவு வருமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை 45,797 வாக்குகளைப் பெற்றுள்ளனர. இது 2015 பெற்ற வாக்குகளை விட 51.4% அதிகமாகும்.<br><br>சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவினால் அபிவிருத்தி என பெரிதாக எதையும் செய்ய முடியாது போயிருந்தாலும், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதனால், அவரது வாக்கு வங்கியில் எப்போதும் வீழ்ச்சி வரப்போவதில்லை.</p>



<h5 class="wp-block-heading">அங்கஜன் இராமநாதன்</h5>



<p>இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் (<img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f590-1f3fb.png" alt="🖐🏻" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" />) நின்று யாழ் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பினும், இவரை இப்போது வழி நடத்துவது மகிந்த அணியா (பொதுஜன பெரமுன) அல்லது சுதந்திரக் கட்சியா என தெரியவில்லை.உயர் அரச செல்வாக்கு மற்றும் பணபலம் இருப்பதனால் அங்கஜனால் பிரச்சாரங்கள் மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தனித்து நின்று சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். <br><br>இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய 185% அதிகரிப்பு. <strong>ஒரு பழம்பெரும் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றது யாழில் மட்டுமே!!</strong> அதுவும் <span style="text-decoration: underline;">முற்றுமுழுதாக தமிழ் வாக்குகள் மூலம் </span>கிடைத்த வெற்றி. இதற்கு பிரதியுபகாரமாக அங்கஜன் நல்லது செய்வாரென்று நம்புவோமாக.</p>



<p>இனிவரும் காலங்கள் பல சவால்கள் நிறைந்தவையாக அமையப் பெறும். கொரோனா தாக்கத்தினால் உலகமே தலை கீழாகப் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளின் எண்ணிக்கையில் பல மடங்கு வீழ்ச்சி ஏற்படும். இதனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து யாழ் முதல் காலிவரை அதனை ஊக்குவித்து, மேம்படுத்தினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தியடையும். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/general-election-2020-jaffna/">யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/general-election-2020-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
