<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Parliament &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<atom:link href="https://puthinam.news/tag/sri-lanka-parliament/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://puthinam.news</link>
	<description>Sri Lanka news &#124; Tamil Breaking NEWS &#124; Tamil News</description>
	<lastBuildDate>Sat, 16 Nov 2024 02:50:19 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://puthinam.news/wp-content/uploads/2020/03/cropped-Gif-1-Puthinam-Tam-300x-e1594824333300-32x32.jpg</url>
	<title>Sri Lanka Parliament &#8211; Puthinam NEWS புதினம் &#8211; Sri Lanka Tamil NEWS</title>
	<link>https://puthinam.news</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி</title>
		<link>https://puthinam.news/npp-all-island-159-seats/</link>
					<comments>https://puthinam.news/npp-all-island-159-seats/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Nov 2024 02:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=10022</guid>

					<description><![CDATA[<p>இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்கள். இலங்கை வரலாற்றில் தனிக்கட்சியாக 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 159 ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் கட்சி இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் தவிர, இலங்கையின் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-all-island-159-seats/">159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை வரலாற்றில் தனிக்கட்சியாக <strong>18 தேசிய பட்டியல் </strong>ஆசனங்கள் உள்ளடங்கலாக <strong>159</strong> ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் கட்சி இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் தவிர, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது.</p>



<figure class="wp-block-table is-style-stripes" style="font-size:14px"><table><thead><tr><th>தேர்தல் மாவட்டம்</th><th class="has-text-align-center" data-align="center">வாக்குகள்</th><th class="has-text-align-center" data-align="center">ஆசனங்கள்</th></tr></thead><tbody><tr><td>கொழும்பு</td><td class="has-text-align-center" data-align="center">788,636</td><td class="has-text-align-center" data-align="center">14</td></tr><tr><td>கம்பஹா</td><td class="has-text-align-center" data-align="center">898,759</td><td class="has-text-align-center" data-align="center">16</td></tr><tr><td><a href="https://puthinam.news/npp-wins-jaffna-vanni/">யாழ்ப்பாணம்</a></td><td class="has-text-align-center" data-align="center">80,830</td><td class="has-text-align-center" data-align="center">3</td></tr><tr><td>வன்னி</td><td class="has-text-align-center" data-align="center">39,894</td><td class="has-text-align-center" data-align="center">2</td></tr><tr><td>மட்டக்களப்பு</td><td class="has-text-align-center" data-align="center">55,498</td><td class="has-text-align-center" data-align="center">1</td></tr><tr><td>திருகோணமலை</td><td class="has-text-align-center" data-align="center">87,031</td><td class="has-text-align-center" data-align="center">2</td></tr><tr><td>அம்பாறை</td><td class="has-text-align-center" data-align="center">146,313</td><td class="has-text-align-center" data-align="center">4</td></tr><tr><td>களுத்துறை</td><td class="has-text-align-center" data-align="center">452,398</td><td class="has-text-align-center" data-align="center">8</td></tr><tr><td>கண்டி</td><td class="has-text-align-center" data-align="center">500,596</td><td class="has-text-align-center" data-align="center">9</td></tr><tr><td>நுவலியா</td><td class="has-text-align-center" data-align="center">161,167</td><td class="has-text-align-center" data-align="center">5</td></tr><tr><td>மாத்தளை</td><td class="has-text-align-center" data-align="center">181,678</td><td class="has-text-align-center" data-align="center">4</td></tr><tr><td>காலி</td><td class="has-text-align-center" data-align="center">406,428</td><td class="has-text-align-center" data-align="center">7</td></tr><tr><td>மாத்தறை</td><td class="has-text-align-center" data-align="center">317,541</td><td class="has-text-align-center" data-align="center">6</td></tr><tr><td>ஹம்பாந்தோட்டை</td><td class="has-text-align-center" data-align="center">234,083</td><td class="has-text-align-center" data-align="center">5</td></tr><tr><td>குருநாகல்</td><td class="has-text-align-center" data-align="center">651,476</td><td class="has-text-align-center" data-align="center">12</td></tr><tr><td>அநுராதபுரம்</td><td class="has-text-align-center" data-align="center">331,691</td><td class="has-text-align-center" data-align="center">7</td></tr><tr><td>புத்தளம்</td><td class="has-text-align-center" data-align="center">239,576</td><td class="has-text-align-center" data-align="center">6</td></tr><tr><td>கேகாலை</td><td class="has-text-align-center" data-align="center">312,441</td><td class="has-text-align-center" data-align="center">7</td></tr><tr><td>மொனராகலை</td><td class="has-text-align-center" data-align="center">174,730</td><td class="has-text-align-center" data-align="center">5</td></tr><tr><td>இரத்தினபுரி</td><td class="has-text-align-center" data-align="center">368,229</td><td class="has-text-align-center" data-align="center">8</td></tr><tr><td>பதுளை</td><td class="has-text-align-center" data-align="center">275,180</td><td class="has-text-align-center" data-align="center">6</td></tr><tr><td>பொலனறுவை</td><td class="has-text-align-center" data-align="center">159,010</td><td class="has-text-align-center" data-align="center">4</td></tr></tbody><tfoot><tr><td><strong>மொத்தம்</strong></td><td class="has-text-align-center" data-align="center"><strong>6,863,186</strong></td><td class="has-text-align-center" data-align="center"><strong>141</strong></td></tr></tfoot></table></figure>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-all-island-159-seats/">159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/npp-all-island-159-seats/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</title>
		<link>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/</link>
					<comments>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 03:17:10 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9851</guid>

					<description><![CDATA[<p>வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார். படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார். வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/" target="_blank" rel="noreferrer noopener">சுயேட்சை</a> குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.</p>



<p class="wp-block-paragraph"><strong>படித்த-புதிய-இளம்</strong> வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார்.</p>



<p class="wp-block-paragraph">வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் என ஏங்குபவர்களின் ஆதரவை அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.</p>



<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="665" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp" alt="dr archchuna Jaffna election 2024" class="wp-image-9824" style="aspect-ratio:16/9;object-fit:cover" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-1024x665.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-300x195.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-768x499.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-646x420.webp 646w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-150x97.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr-696x452.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dr.webp 1059w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">அர்ச்சுனா சமூக வலைத்தளங்களை மிகவும் திறமையாகக் கையாளுகின்றார். நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் மக்களுடன் நேரடித் தொடர்பாடலைப் பேணி வருவதால், மக்கள் மத்தியில் அர்ச்சுனாவின் புகழ் மெதுமெதுவாக உயர்வடைந்து செல்கின்றது.</p>



<p class="wp-block-paragraph">எப்படியாவது உண்மையை மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக அர்ச்சுனா மாற்றி மாற்றி பல விடயங்களை முகநூல் <strong>நேரடிக் கானொளிகளில்</strong> பேசி வந்ததினால், பலருக்கு ஒரு குழப்பமான மற்றும் சலிப்புத் தன்மையான பார்வை அர்ச்சுனா மீது ஏற்பட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph"><em>இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், சாதாரண பதிவுகள் (posts), படங்கள்(photos), வீடியோக்களைக் காட்டிலும் நேரடிக் கானொளிகள் (live video) மட்டுமே சிறந்த சான்று/சாட்சியாக உள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அர்ச்சுனா இயன்றளவு எல்லாவற்றையும் நேரடிக் காணொளிகளில் பதிவிட்டு வருகிறார்.</em> உண்மையில் <strong>அர்ச்சுனாவை நோக்குவதை விடுத்து, அவர் கதைத்த/கதைக்கின்ற  விடயங்களை உற்று நோக்கினால், அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும்</strong> என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.</p>



<p class="wp-block-paragraph">அர்ச்சுனா முகநூலில் உண்மைகளைக் கதைக்கும்போது ஏளனம் செய்தவர்கள், அவர் பாராளுமன்றில் கதைக்கும்போது ஏளனம் செய்ய முடியாது. பாராளுமன்றில் பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் பாராளுமன்ற பதிவேட்டில் ஏற்றப்படும்.</p>



<p class="wp-block-paragraph">இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் இடம்பெற்ற அர்ச்சுனாவின் கைது மற்றும் அவரது சிறைவாசம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரது கைது மற்றும் சிறைவாசத்தின் பின்னர் நல்லதே நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற பேச்சுகள் மற்றும் நேரடி கானொளிகள் குறைவடைந்துள்ளதுடன், அர்ச்சுனாவும் சற்று சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">ஒரு சாதாரண மனிதனுக்கு அரசியல் தீர்வு, தமிழ்த்தேசியம் போன்றவற்றிலும் பார்க்க, பக்கத்து தெருவில் நடக்கும் நிகழ்வு/பிரச்சனை மிக முக்கியம்/ஆபத்தானது. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சனையின்போது தமிழ்த் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? (டக்ளஸ் தேவானந்தா தவிர) <br><strong>மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டத்தில் நடக்கும் பாரிய மோசடிகள்/முறைகேடுகள் பற்றிக் கேட்பதற்கு உரிமை அல்லது அதிகாரம் இல்லையா????</strong> சாதாரண விதானைமார் செய்யும் மோசடிகளைக் கூட கேட்கும் திராணியற்றவர்களாகதான் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். </p>



<p class="wp-block-paragraph">மேலும் தற்போதைய யாழ் தேர்தல் கள நிலவரத்தின்படி, பல கட்சிகள் சுயேட்ச்சைக் குழுக்கள் என 396 பேர் போட்டியிடுவதால் வாக்குகள் நாலா திசைகளிலும் சிதறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் <a href="https://www.facebook.com/eagle.feder.3?mibextid=LQQJ4d" target="_blank" rel="noreferrer noopener">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு இன்னும் <strong>சற்று முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், கடந்த 2020 தேர்தலில் C.V.விக்னேஷ்வரன் ஒரு ஆசனத்தைப் பெற்றது போன்று, அர்ச்சுனாவும் ஒரு ஆசனத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது!</strong></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</title>
		<link>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/</link>
					<comments>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 02:26:47 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9841</guid>

					<description><![CDATA[<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது. ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன்  மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!</p>



<p class="wp-block-paragraph">தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் <a href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/">அர்ச்சுனாவின்</a> சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை. <br>தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும், <br><span style="font-family: -webkit-standard; font-size: medium; white-space: normal;">தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை </span>எனவும், <br>அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும், <br>தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் <strong>பொதுநலத்துடன் சிந்தித்து</strong>  வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. <strong>தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள். </strong></p>



<p class="wp-block-paragraph"><strong>வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே</strong> என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு <strong>இல்லாத</strong>, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.</p>



<p class="wp-block-paragraph">கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் <strong>போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன்</strong> வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.</p>



<h2 class="wp-block-heading has-text-align-center">&#8211; உங்கள் வாக்கு உங்கள் பலம் &#8211;</h2>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/">திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/npp-jaffna-tamil-candidates/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</title>
		<link>https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 02:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Shritharan MP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9831</guid>

					<description><![CDATA[<p>ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">யாழில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னர் கட்சியின் பெயரைத் திருடினார்கள், இப்போ கட்சியின் சின்னத்தை திருடியுள்ளார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், 1956 முதல் இன்றுவரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) அங்கம் வகித்து, இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் டெலோ, புளொட் போன்ற கட்சிகளையே சுமந்திரன் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். 90களில் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில் டெலோ மற்றும் புளொட் செய்த கொடுமைகளை சுமந்திரன் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அதேவேளை தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் சுமந்திரன் &#8220;மாம்பழத் திருடர்கள்&#8221; என வர்ணித்துள்ளதுடன், அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேணும் எனவும் கேட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுத்த C.V.விக்னேஷ்வரனையும் சுமந்திரன் விட்டுவைக்கவில்லை. (அபலைப் பெண் என C.V.விக்னேஷ்வரன் குறிப்பிட பெண் உண்மையில் அபலைப் பெண் அல்ல. அவர் கோடீஸ்வரி என்பது பலருக்குத் தெரியாது).</p>



<p class="wp-block-paragraph">மேலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு பகிரங்க சவால் விட்ட சுமந்திரன், மதுபானசாலைக்களுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிட முடியுமா எனவும் கேட்டுள்ளார். அநுர அரசாங்கம் அந்த தகவல்களை வெளியிட்டால், அதில் <strong><span style="background-color:#e32a2a" class="td_text_highlight_marker">தன்னுடன் சேர்ந்து போட்டியிடும், தன்னுடன் முழுமையாக ஒத்துழைக்காத ஶ்ரீதரனுடைய பெயர் இருந்தால்</span></strong>,ஶ்ரீதரனுக்கு மக்கள் மத்தியில் பாரிய பின்னடவு ஏற்படலாம் என  சுமந்திரன் கருதி இருக்கலாம்!! இதன் மூலம் ஶ்ரீதரனையும் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம் கட்டலாம் என சுமந்திரன் கணக்கு போட்டிருக்கலாம்!!</p>



<p class="wp-block-paragraph">கடந்த தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் ஶ்ரீதரன் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். மேலும் அவர் தொடர்ந்தும் சுமந்திரனின் வழியில் முழுமையாகச் செல்லாமல், மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், புளொட், டெலோவுடனும் நட்பைப் பேணி வருகிறார். மேலும் <span style="background-color:#ce3333" class="td_text_highlight_marker">ஶ்ரீதரன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை அவசர அவசரமாக சென்று சந்தித்தன் காரணமும் சற்று மர்மமாகவே உள்ளது.</span> </p>



<p class="wp-block-paragraph">தமிழருக்கு தமிழ்க் கட்சிகளால் இதுவரை எவ்வித நன்மைகளும் நடைபெறவில்லை. 2015ல் நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசுடன் மிக மிக நெருக்கமாக இருந்தும் தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம், அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியாத நிலமையில் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் எவ்வாறு பாரம்பரிய கட்சிகளை நம்புவது என்பதும் இன்று தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.</p>



<p class="wp-block-paragraph"><span style="background-color:#f20a0a" class="td_text_highlight_marker">சட்டப் புலமை கொண்ட சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாறுவாரா, சிதைத்துவிடுவாரா என்ற ஒரு பாரிய சந்தேகமும் தமிழர்கள் மத்தியில் உள்ளது.</span> புலம்பெயர் தமிழர்கள், பல முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என பலரினதும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ள சுமந்திரன், இம்முறை தேர்தலில் <a href="https://puthinam.news/itak-jaffna-candidates-2024/">புதியவர்களுடன்</a> களம் இறங்குகின்றார். மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகின்றது என்பதை நவம்பர் 15ம் திகதி தெரிந்துகொள்வோம்.</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sumanthiran-jaffna-election-2024/">கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்&#8230;..  சுழட்டி அடிக்கும் சுமந்திரன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அதிரடி காட்டும் அர்ச்சுனா</title>
		<link>https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/</link>
					<comments>https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Oct 2024 23:12:09 +0000</pubDate>
				<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Chavakachcheri]]></category>
		<category><![CDATA[Dr Archchuna]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9822</guid>

					<description><![CDATA[<p>வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். சுயேட்சைக் குழு 17ம் இலக்கத்தில் &#8220;ஊசி&#8220;(syringe) சின்னத்தில் அர்ச்சுனா அணியினர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் விபரம், Dr.R.அருச்சுனா பவித்திரா.K (ஆசிரியர்) கௌசல்யா.N (சட்டத்தரணி) பத்மலோஜினி.N (மொழிவளவாளர்) S.மயூரன் (பொறியியலாளர்) S.யோகபாலன் (மென் பொறியியலாளர்) S.சிறிபிரகாஷ் (வியாபாரம்) R.அறிவன்பன் (ஆசிரியர்) T.கிருஷ்ணானந் (நிர்வாக இயக்குனர்)</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/">அதிரடி காட்டும் அர்ச்சுனா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">சுயேட்சைக் குழு <strong>17</strong>ம் இலக்கத்தில் &#8220;<strong>ஊசி</strong>&#8220;(syringe) சின்னத்தில் <a href="https://puthinam.news/dr-archchuna-election-jaffna-kilinochchi/">அர்ச்சுனா</a> அணியினர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="628" src="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-1024x628.webp" alt="dr archchuna Jaffna election 2024" class="wp-image-9823" style="aspect-ratio:16/9;object-fit:cover" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-1024x628.webp 1024w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-300x184.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-768x471.webp 768w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-1536x942.webp 1536w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-685x420.webp 685w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-150x92.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-696x427.webp 696w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra-1068x655.webp 1068w, https://puthinam.news/wp-content/uploads/2024/10/dra.webp 1806w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph"><strong>வேட்பாளர்கள் விபரம்</strong>,<br> Dr.R.அருச்சுனா<br> பவித்திரா.K (ஆசிரியர்)<br> கௌசல்யா.N (சட்டத்தரணி)<br> பத்மலோஜினி.N (மொழிவளவாளர்)<br> S.மயூரன் (பொறியியலாளர்)<br> S.யோகபாலன் (மென் பொறியியலாளர்)<br> S.சிறிபிரகாஷ் (வியாபாரம்)<br> R.அறிவன்பன் (ஆசிரியர்)<br> T.கிருஷ்ணானந் (நிர்வாக இயக்குனர்)</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/">அதிரடி காட்டும் அர்ச்சுனா</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/dr-archchuna-jaffna-election-2024/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் தேர்தல் களம் 2024</title>
		<link>https://puthinam.news/parliament-election-2024-jaffna/</link>
					<comments>https://puthinam.news/parliament-election-2024-jaffna/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Oct 2024 07:56:15 +0000</pubDate>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Local news]]></category>
		<category><![CDATA[Angajan Ramanathan]]></category>
		<category><![CDATA[EPDP]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[TNPF]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9806</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.</p>



<p class="wp-block-paragraph">யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என <strong>396</strong>பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.</p>



<p class="wp-block-paragraph" style="font-size:25px"><strong>தமிழரசுக் கட்சி (</strong>சின்னம் வீடு<strong>)</strong></p>



<p class="wp-block-paragraph">2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை <strong>இழந்திருந்தது</strong>. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் <a href="https://puthinam.news/itak-election-candidates/">ஆதிக்கம்</a>, அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.</p>



<p class="wp-block-paragraph" style="font-size:25px"><strong>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (</strong>சின்னம் சைக்கிள்<strong>)</strong></p>



<p class="wp-block-paragraph">2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் <strong>பெற்</strong>று <a href="https://puthinam.news/election-2020-north-east/">மாவட்டரீதியில்</a> இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.</p>



<p class="wp-block-paragraph">கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் <strong>சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை</strong> என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.</p>



<p class="wp-block-paragraph" style="font-size:25px"><strong>அங்கஜன் அணி(</strong>தபால் பெட்டி<strong>)</strong></p>



<p class="wp-block-paragraph">2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>



<p class="wp-block-paragraph">இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>



<p class="wp-block-paragraph" style="font-size:25px"><strong>EPDP (</strong><strong>வீணை</strong><strong>)</strong></p>



<p class="wp-block-paragraph">2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph" style="font-size:25px"><strong>தேசிய மக்கள் சக்தி (</strong>திசை காட்டி<strong>)</strong></p>



<p class="wp-block-paragraph">இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.</p>



<p class="wp-block-paragraph">நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை &#8220;<strong>சிங்கள</strong>&#8221; கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.</p>



<p class="wp-block-paragraph">தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.&nbsp;</p>



<p class="wp-block-paragraph">மேலும்,<strong>மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள்.</strong> எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும். </p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!</p>



<p class="has-text-align-center wp-block-paragraph" style="font-size:29px">&#8211; <strong>மாற்றம் ஒன்றே மாறாதது</strong> &#8211;</p>



<figure class="wp-block-pullquote" style="font-size:28px"><blockquote><p><a href="https://puthinam.news/parliament-election-results-jaffna/" target="_blank" rel="noreferrer noopener">பாராளுமன்றத் தேர்தல் 2020<br>யாழ் மாவட்டம்</a></p></blockquote></figure>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/parliament-election-2024-jaffna/">யாழ் தேர்தல் களம் 2024</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/parliament-election-2024-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்</title>
		<link>https://puthinam.news/sri-lanka-parliament-election-november/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Sep 2024 23:43:03 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9748</guid>

					<description><![CDATA[<p>இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்கவினால் கலைகப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியினூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி (14/11/2024) பொதுத் தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 21ம் திகதி (21/11/24) புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ம் திகதி முதல் 11 திகதிவரை (04/10/24 &#8211; 11/10/240 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-parliament-election-november/">பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கை பாராளுமன்றம் <a href="https://puthinam.news/anura-kumara-dissanayake-president/">ஜனாதிபதி</a> அநுர குமார திசாநாய்க்கவினால் கலைகப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியினூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மேலும் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி (14/11/2024) பொதுத் தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் 21ம் திகதி (21/11/24) புதிய பாராளுமன்றம் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இதேவேளை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ம் திகதி முதல் 11 திகதிவரை (04/10/24 &#8211; 11/10/240 நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<figure class="wp-block-image size-full"><img decoding="async" width="702" height="1000" src="https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1.webp" alt="" class="wp-image-9749" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1.webp 702w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1-211x300.webp 211w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1-295x420.webp 295w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1-150x214.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1-300x427.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p1-696x991.webp 696w" sizes="(max-width: 702px) 100vw, 702px" /></figure>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="761" height="1000" src="https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2.webp" alt="" class="wp-image-9750" srcset="https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2.webp 761w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2-228x300.webp 228w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2-320x420.webp 320w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2-150x197.webp 150w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2-300x394.webp 300w, https://puthinam.news/wp-content/uploads/2024/09/p2-696x915.webp 696w" sizes="auto, (max-width: 761px) 100vw, 761px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/sri-lanka-parliament-election-november/">பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</title>
		<link>https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Dec 2022 07:55:32 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[School]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<category><![CDATA[Students]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=9026</guid>

					<description><![CDATA[<p>பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார். மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/">நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின்  விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், அவர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால் இராஜாங்க நிதி அமைச்சரின் கருத்து வேறு விதமாக உள்ளது. <a href="https://puthinam.news/wimal-weerwansa-gotabaya-rajapaksa/">விமலின்</a> உரையை குறுக்கீடு செய்து பதிலளித்த இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, பாடசாலை மீதான பொருட்களுக்கு வரி அதிகரிப்படவில்லை என தெரிவித்ததுடன், டொலரின் விலை அதிகரிப்பே பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/school-stationaries-price-sri-lanka/">நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</title>
		<link>https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/</link>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Nov 2022 22:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[Sport NEWS]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[Soccer]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8947</guid>

					<description><![CDATA[<p>இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார். தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் &#8220;வெட்டுகளை&#8221; நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/">தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் &#8220;வெட்டுகளை&#8221; நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் துறையின் மூலம்  நிலைநாட்டும்படியும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், யாழ் புனித <a href="https://puthinam.news/jaffna-st-patricks-college-champion/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">சம்பத்திரிசியார்</mark></a> கல்லூரி மற்றும் மன்னார் புனித சேவியர் கல்லூரி அணிகள் கொழும்பில் வந்து கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடியமை ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/mano-ganesan-sri-lanka-cricket/">தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் &#8211; மனோ கணேசன்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</title>
		<link>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/</link>
					<comments>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[புதினம்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Nov 2022 23:25:56 +0000</pubDate>
				<category><![CDATA[National news]]></category>
		<category><![CDATA[Budget]]></category>
		<category><![CDATA[Ranil Wickramasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://puthinam.news/?p=8687</guid>

					<description><![CDATA[<p>ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார். நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக முதலீட்டுச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார்துறையினர் [&#8230;]</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/">ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p class="wp-block-paragraph">ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இன்று(14/11) தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கின்றார்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கையின் நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியே பதவி வகிப்பதால், அவரே இன்று 2023 இற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கின்றார். </p>



<p class="wp-block-paragraph">நீண்டகால, நிலையான, பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக முதலீட்டுச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தனியார்துறையினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்  முக்கிய பங்கெடுக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக <a href="https://puthinam.news/mohamed-nasheed-ranil/"><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">ஜனாதிபதியின்</mark></a> ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/">ஜனாதிபதி ரணில் முன்வைக்கும் முதலாவது வரவு செலவு திட்டம்</a> appeared first on <a rel="nofollow" href="https://puthinam.news">Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://puthinam.news/2023-budget-sri-lanka-ranil/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
