தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்

தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு சிங்களவர்கள் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் எப்படி வேலைகளை வினைத்திறனுடன் செய்ய முடியுமெனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ்ப்பாணத்தில் அரச அலுவலகங்களில் சாதாரண பியோன் மற்றும் வாகன ஓட்டுனர்களாகக்கூட சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles