சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பை ஏற்று,  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ ஷியன் லூங் இன்று (22/01) மாலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

Singapore prime minister visits sri lankaசிங்கப்பூர் பிரதமர்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் ஒருவர்  பதின்மூன்று வருடங்களின் பின்னர் இலங்கைக்கு உத்தியோகரீதியாக விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles