சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார்

முன்னாள் ரெலோ அமைப்பின் உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார். வயதின் அடிப்படையில், அவர் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் சற்று குறைவடைந்து இருப்பதாகவும், இருப்பினும் குடாநாடு இன்னும் கொரோனா தொற்று அபாய நிலையிலேயே இருப்பதாகவும் யாழ் அரச அதிபர் திரு மகேசன் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles