அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் – அமைச்சர்

இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுமென மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், முன்பெல்லாம் வெவ்வேறு நாட்களில் நடத்தப்பட்ட மாகாண சபை தேர்தல்களை நாம் ஒரே நாளில் நடத்த முயற்சிக்கின்றோம்.

மேலும் சாத்தியமேற்படும் பட்சத்தில், பொதுத் தேர்தலுடன், ஜனாதிபதித் தேர்தலையும் சேர்த்து நடத்துவோம். இதன் மூலம் மிகப் பெருமளவு நிதியினை சேமிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles